Friday 31 October 2014

DREAMS...11





KINDNESS ...7





BEST GIFTS.....3




பிரார்த்தனை....26






SMILE...173




கல்வி...31

கல்வி ஓர் அழியாச் செல்வம் என்று விளக்கிய வள்ளுவர்அந்த
அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்பதினால் வரும்
சிறப்புகளையும் குறிப்பிடுகிறார். அது கண் போன்றது என்கிறார்.
‘கண்’ என்றால் தமிழில் ஒளி என்று பொருள்.கல்வி எவ்வாறு
ஒளியாக விளங்குகிறது என்பதையும் விளக்குகிறார்.
எல்லா உறுப்புகளும் சரியாக இருந்தும், ‘கண்’ இல்லாவிட்டால்
ஒருவனால், பொருள்களையும், காட்சிகளையும், இயற்கையின்
அழகுகளையும் காண இயலாது. எனவே அவன் ஒரு முழுமை
பெற்ற மனிதனாகக் கருதப்படமாட்டான். இந்த உண்மையின்
அடிப்படையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், தேவையையும்
வற்புறுத்த விரும்பிய வள்ளுவர், கல்வியைக் கண்ணோடு
ஒப்பிடுகிறார்.

நம் வாழ்க்கையின்     இன்பதுன்பங்கள்     பலவற்றிற்கும்,
புறக்காட்சிகளும், நிகழ்ச்சிகளும்தானே காரணம்? நாம் பார்க்கும்
சில விபத்துகள் நம் உள்ளத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. நம்
கண்முன்னாலே அடிக்கடித் தோன்றி மறைகின்றன. இந்தக்
காட்சியை நாம் பார்த்திருக்காவிட்டால், எந்தப் பாதிப்பும்
ஏற்படாது இல்லையா?

மகிழ்ச்சியோ, துன்பமோ, நாம் பார்க்கும் காட்சி அல்லது
நிகழ்ச்சியால் தானே அமைகின்றது? இந்த அனுபவத்தை அல்லது
நுகர்வை எது வழங்குகிறது? கண். காலம்காலமாக அறிஞர்களும்
சான்றோர்களும் தாம் கண்டவற்றையும், அவற்றின் அடியில்
எழுந்த     சித்தாந்தங்களையும்,     கொள்கைகளையும்,
கண்டுபிடிப்புகளையும், அறிவுரைகளையும், இன்ன பிறவற்றையும்
நம் புலனுக்குக் கொண்டு வருவது கல்வியே. இக்காரணம் கருதி,
வள்ளுவர், கல்வியைக் கண் என்கிறார்.

கல்வியின் அடிப்படை எண்ணும் எழுத்தும். இலக்கியம், சமயம்,
தத்துவம், அறிவியல், கணிதம் எனக் கல்வியின் துறைகள்
அனைத்தும் எண்ணையும் எழுத்தையும் சார்ந்தே அமைந்துள்ளன.

சில துறைகளில் எண்ணின் சார்பு மிகுதியாகவும் சிலவற்றில் எழுத்தின் சார்பு
மிகுதியாகவும் உள்ளன. எண், எழுத்து
ஆகிய இரண்டும் மனிதர்க்கு இருகண்கள்.
இரண்டு கண்களும் பொருந்தி இருத்தல்
முகத்திற்கு அழகு. எண்ணும் எழுத்தும்
பொருந்தியிருத்தல் கற்ற கல்விக்கு அழகு.


எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் 
கண் என்ப வாழும் உயிர்க்கு.

AMAZING ADS...75

Rowenta Watt Vacuum Cleaner:

குரு - சீடன்....18


ஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆசிரமத்தில் ஆன்மிக விழாவுக்காக லட்டுகள் தயார் செய்து வைத்திருந்தார்கள். எறும்புகள் வந்து விட்டால் என்ன செய்வது என சீடர்கள் யோசித்தார்கள்.


பரமஹம்சரோ லட்டுக் குவியலைச் சுற்றிலும் சர்க்கரையை வட்டமாகத் தூவினார். அவரது சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரத்தில் லட்டை நோக்கி வந்த எறும்புகள் சர்க்கரையை மட்டும் தின்றுவிட்டு சென்றன,


download (3)



இதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட சீடர்களை நோக்கி பரஹம்சர் “சில மனிதர்களும் இப்படித்தான் பெரிய லட்சியங்களை விட்டு விட்டு சின்ன சின்ன விஷயங்களிலேயே சமாதானமாகி விடுவார்கள்” என்றார்.

AMAZING PHOTOS...73


Wednesday 29 October 2014

அறு(சு)வையா​னந்தா....4

ஏழாம் சுவை - நகைச்சுவை   

அறு(சு)வையா​னந்தா

    
ஜி யை சந்திக்கச் சென்றபோது அவர் தன் பக்தகோடிகளிடம் சிரிப்பவர்களின் வகைகள் பற்றி சொல்லிக்கொடிருந்தார்.

அவர் வகை படுத்தியதை சுருக்கமாகச் சொன்னால் -

தனக்குள் சிரிப்பவன் ஞானி 
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம் 
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன் 
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன் 
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி 
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன் 
பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன் 
பிறர் காணச் சிரிப்பவன் கோமாளி 
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி 
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்மயோகி 

பக்தகோடிகளை அனுப்பிவிட்டு எங்களிடம் வந்த ஜி, தெனாலிராமன், பீர்பால் மற்றும் முல்லா கதைகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் முல்லா பற்றி கேட்டதற்கு, ஜி கூறியதாவது -

முல்லா என்கிற  முல்லா நஸ்ருதீன்  சூஃபி ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம்.  உள்ளத்தை ஆராய்வது சூஃபித்துவத்தின் அடிப்படை.முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர்.முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை.வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள்.ஓஷோ, முல்லாவின் கதைகளை  நிறைய தன சொற்பொழிவுகளில் பயன்படுத்தியுள்ளார்.

ஜி சொன்ன முல்லா கதைகள் -.

ரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ''உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?'' என்று கேட்டார்.முல்லா, ''முடியாததற்கு வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்'' என்றார்.முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ''கழுதை அங்கிருந்து சத்தமிடுகிறதே முல்லா'' என்றார். உடனே கோபத்துடன், ''என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை'' என்றார் முல்லா.

*********************************************************************

முல்லாவின்கழுதை ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ''அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது'' என்றார். ''உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?'' என்று கேட்டனர். முல்லா, ''நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்... நல்லவேளை'' என்றாராம்.

*******************************************************************

முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் மது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர்

ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா வந்து வணங்கி நின்றார். முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும்,

நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும்
நீர் சொல்வது பொய்யாக இருந்தால் நீர் தூக்கில் ஏற்றப்படுவீர் என்றார் மன்னன். 

முல்லா உண்மை சொன்னாலும் பொய்யை சொன்னாலும் அவர் உயிருக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. 

முல்லா நிலமையை எவ்வாறு சமளிக்கபோகிறர் என்று சபையோர் அவரையே கவனித்தனர். முல்லா எதைக் கூறி தப்பியிருப்பார்?

முல்லா மன்னனை நோக்கி மன்னர் அவர்களே...தாங்கள் என்னை தூக்கில் போடபோகிறீர்கள்   என்று பதற்றம் ஏதுமின்றிக் கூறினார். 

அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார். முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும் அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும். முல்லா கூறியது பொய் என்று வைத்துக்கொண்டால் முல்லாவைத் தூக்கில் போடவேண்டும். தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை எனக் கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும். இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து முல்லா மன்னனைத் திக்குமுக்காடச் செய்து விட்டார். அவரது அறிவாற்றலைக் கண்ட மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்து
அனுப்பினான்.

*******************************************
ஓஷோ சொன்ன முல்லா ஜோக்  -

முல்லா நசுருதீன் ஒரு வேளையில் சேர்ந்தார்....
சில நாட்கள் கழித்து அவர் முதலாளி அவரை கூப்பிட்டார்....
" முல்லா.. நீங்கள் இந்தத் துறையில் ஐந்து வருடம் அனுபவம் இருப்பதாகச் சொல்லி வேலையில் சேர்ந்தீர்கள்...ஆனால் நீங்கள் இதற்கு முன் எந்த வேலையும் செய்யவில்லை என்று நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்....ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்கள் ?"

முல்லா: சார், நீங்க தானே பேப்பர்ல "கற்பனைத் திறம்" மிக்க ஆட்கள் தேவைன்னு விளம்பரம் கொடுத்தீங்க?"


CARE....6




SUCCESS....31








AMAZING ADS...73


SMILE...172




Give me a sense of humor, Lord,
Give me the grace to see a joke, 
To get some humor out of life,
And pass it on to other folk! 


Two factory workers are talking. The woman says, "I can make the boss give me the day off." The man replies, "And how would you do that?" The woman says, "Just wait and see." She then hangs upside down from the ceiling. The boss comes in and says, "What are you doing?" The woman replies, "I'm a light bulb." The boss then says, "You've been working so much that you've gone crazy. I think you need to take the day off." The man starts to follow her and the boss says, "Where are you going?" The man says, "I'm going home, too. I can't work in the dark."              



AMAZING PHOTOS...71


Tuesday 28 October 2014

PARENTING.....18




AMAZING ADS...72


SMILE...171


Once there was long chat between the god and the devil. 

Suddenly the power went off for 10 minitues and when it came back whatever the god said was stored and the talk of devil was not stored. 

The devil got angry and said ''how is it possible'' and god answered "I saved''





ANGER...10

ஒரு முறை புத்தர், பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவன், புத்தரை தொடர்ந்து திட்டிக் கொண்டேயிருந்தான். அதைக்கேட்ட புத்தர், அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார். அவரது சீடனுக்கு கோபம் வந்து விட்டது. "சுவாமி, அவன் அவ்வளவு திட்டுகிறான்; நீங்களோ சிரிக்கின்றீர்களே,' என்று சீடன் சொன்னதற்கு, "ஒரு பொருளை ஒருவர் கொடுக்கும் போது, நாம் வாங்காவிட்டால், அது அவருக்கே சேரும். அதைப்போல, அவன் பேசும் வார்த்தைகளும் அவனுக்கே சேரும்,' என்று புத்தர் விளக்கினார்.

1. எவன் ஒருவன் தனது கோபத்தைத் தடுத்துக் கொள்கிறானோ, அவன் தன்னுடைய பெரிய எதிரியை வெற்றிகொண்டவன் ஆகிறான்.
-லத்தீன்


2. கோபம் கொப்பளிக்கும் அந்த ஒரு கணத்தில், நீ பொறுமை காத்தால் நூறு நாள் துன்பத்திலிருந்து தப்பித்து விடுவாய்.
-சீனம்


3. கோபத்தை வெளிக்காட்டுவது, குளவிக் கூட்டின் மீது கல்லெறிவதற்கு ஒப்பானது.
-மலபார்

4. கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி, அதைத் தாமதப்படுத்துவது.
-செனேகா


5. ஒரு கண நேரத்தின் கோபத்தை அடக்கி வைப்பவன், ஒரு நாளையத் துயரத்தை அடக்கியவனாவான்.

-முதுமொழி




. சினத்தை ஒழிக்க வேண்டும். சினம் ஒழிய மனம் அடையும் நிலைதான் பொறுமை.

-வேதாத்திரி மகரிஷி

Monday 27 October 2014

SUCCESS....30





AMAZING PHOTOS...70


AMAZING ADS...71


TRUTH....3

* எந்தநிலையிலும் உண்மையையே பேசுதல், அன்பு ,அகிம்சை , எல்லா உயிர்களையும் நேசித்தல் ஆகிய நற்குணங்களை பின்பற்றுபவன் உயர்ந்த தெய்வீக நிலையை அடைவான்.
 

* கடவுள் ஒரு சர்வாதிகாரியோ, உயிர்களை இம்சை செய்யும் கொடுங்கோல் மன்னனோ அல்ல. அவர் நம்மீது அன்பு கொண்ட தந்தையாக, தாயாக, தோழனாக இருந்து வழிகாட்டுகிறார்.
 

* எண்ணத்திலும், பேச்சிலும், செயலிலும் தூய்மையைக் கடைபிடிக்கத் தொடங்கினால், நம் அந்தரங்க நோக்கமும், அகவுணர்வும் கூட பரிசுத்தமாகிவிடும்.
 

* எவன் ஒருவன் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மனம் மொழி மெய்களால் வாய்மையைக் கடைபிடிக்கிறானோ அவனது வாய்மொழிகள் அனைத்தும் பலிக்கத் தொடங்கி விடும்.
 

* சத்தியம் எங்கிருக்கிறதோ அந்த இடத்தில் எல்லா நற்குணங்களும் தானாகவே வந்து சேரும். சத்தியம் பேசுபவன் மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும்.
 

* தன்னடக்கம் உள்ளவன் இருக்குமிடமே தவச்சாலை. அவன் தன்னால் முடிந்த நன்மைகளை எல்லா உயிர்களுக்கும் செய்வதிலேயே இன்பம் காண்பான்.
 

-சிவானந்தர்

SMILE...170




POSTER OF THIS WEEK